செய்தி

இலங்கையில் பேஸ்புக் ஊடாக தனியார் விடுதியொன்றில் விருந்து – சிக்கிய 10 பேர்

பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பேஸ்புக் ஊடாக இந்த விருந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 45 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களும், 550 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி