ஆசியா

சிங்கப்பூரில் ஒரு வயதுக் குழந்தைக்கு பெண் செய்த அதிர்ச்சி செயல்

சிங்கப்பூரில் ஒரு வயதுக் குழந்தையின் முகத்தில் பலமுறை அடித்து வலது கன்னத்தில் காயமேற்படுத்தியதாக 40 வயதுப் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிசுப் பராமரிப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அந்தப் பெண் குறித்த விவரங்களை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் அந்தத் தடையை விதித்தது.

இந்த ஆண்டு (2023) மார்ச் 15ஆம் திகதி குழந்தையை மோசமாக நடத்தியதாக அந்தப் பெண் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் வழக்கறிஞரை நியமிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அந்த வழக்கு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது பாதுகாப்பில் விடப்பட்ட குழந்தையை அடித்துக் காயப்படுத்திய குற்றத்துக்காக அந்தப் பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறை அல்லது 8,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!