ஐரோப்பா

முக்கிய நாட்டின் மாணவர்களுக்கான விசாவை இரத்துச் செய்தது பிரான்ஸ்

பிரான்ஸ் மாலி உள்ளிட்ட மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கை நெறிகளுக்கான விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மூன்று ஆபிரிக்க நாடுகளிலும் இராணுவ சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிரான்சின் ஆதரவு நாடாக இருந்த இந்த மூன்று நாடுகளுடனும் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே இந்த முடிவை பிரான்ஸ் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது பிரான்சில் கல்வி கற்று வரும் மேற்குறித்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது கல்வியினை தடையின்றி தொடர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தற்போது இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 6,700 மாணவர்கள் பிரான்சில் கல்வி கற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!