மகாராஷ்டிராவில் 25 பேர் உடல் கருகி பலி!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/m-jpg.webp)
மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
குறித்த பேருந்தில் 33 பேர் பயணித்த நிலையில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் கிடைக்கப்பெற்றுள்ள முதற்கட்ட தகவல்களின்படி பேருந்தின் டயர் வெடித்து சாலையில் இருந்த கம்பத்தில் மோதியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)