போர் பதற்றத்தால் வழிபாட்டுத் தலங்கள் மூடல்!
புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் (Al-Aqsa Mosque) இன்று (6) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஹிஷாம் இப்ராஹிம் (Hisham Ibrahim) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அல்-அக்ஸா மசூதி மாத்திரமன்றி, பழைய ஜெருசலேம் நகரிலுள்ள மேற்கு சுவர் (Western Wall) மற்றும் திருக்கல்லறை தேவாலயம் (Church of the Holy Sepulchre) உட்பட அனைத்து புனிதத் தலங்களும் இன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





