உலகம்

பேருந்தில் மோதிய அதிவேக ரயில்! 7 பேர் பலி

தென் அமெரிக்காவின் சிலியில் பஸ் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து நடந்துள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அந்நகரின் அருகே உள்ள ரயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்சை வேகமாக வந்த ரயில் சில மீட்டர்கள் தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!