பெருவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
பெருவில் 5.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்படி நிலநடுக்கமானது சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருவுக்கு அருகில் அமைந்துள்ள ஈக்வடாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.





