ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் தலைநகரை அச்சுறுத்திய பெண் – சுற்றிவளைத்த பொலிஸார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு கொள்ளைச் சம்பவங்களில் குறித்த பெண்ணுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பெண் Blanc-Mesnil நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிகளில் பரிசில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பல பெறுமதியான நகைகள், பணம் போன்றவற்றைத் கொள்ளையிட்டுள்ளார்.

மொத்தமாக 7 மில்லியன் யூரோக்கள் வரை அவர் கொள்ளையிட்டுள்ளதாக முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் 19 வயதுடையவர் எனவும், அவருடன் சேர்த்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பதினொரு பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!