ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் குடும்பத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்பிய இராணுவ வீரரின் விபரீத செயல்

பிரான்ஸில் Lille நகரில் கடமையாற்றிவந்த இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவர் தனது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Lille நகரில் அமைந்துள்ள முக முக்கியமான இராணுவத்தளமான Kléber முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்த 45 வயதுடைய அதிகாரி ஒருவர், கடந்த திங்கட்கிழமை நண்பகல் அவரது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மருத்துவ உதவிக்குழுவினரால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், மிக நீண்ட மின்னஞ்சல் ஒன்றை தனது குடும்பத்தினருக்கு எழுதியிருந்ததாகவும், அது செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி அளவில் செல்லுமாறு நேரம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி அண்மையில் மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து நாட்டுக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!