பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை

பங்களாதேஷ் இராணுவம், அரசியலில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி இராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர் .
இந்நிலையில், பங்களாதேஷ் அரசியலில் அந்நாட்டு இராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இது தொடர்பாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்சியாக செயற்படுத்துவதற்கு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன .
(Visited 2 times, 1 visits today)