இலங்கை செய்தி

நண்பன் வீட்டில் தங்க வளையலை திருடி செல்ல நாய்க்கு பிறந்தாள் கொண்டாடிய இளைஞன்!

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய குறித்த சந்தேக நபர், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நபர் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்தியதில் சந்தேகம் கொண்டு இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.இதனையடுத்து , அவரது வீட்டில் இருந்த அடகுக் கடை பற்றுச்சீட்டை கண்டுபிடித்து, நகையைத் திருடியவரின் தந்தையைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை