தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆறு மாதங்களுக்குள் கலந்துரையாடப்படும் என்கிறார் ஷெஹான்

தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆறு மாதங்களுக்குள் கலந்துரையாடப்படும் என்று மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாம் அதிகாரிகளுடனும் ஜனாதிபதி செயலகத்துடனும் கூட பல்வேறு சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.
இது தொடர்பில், இந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் புரிந்து கொள்ள விரும்பாமலோ அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்வதோ வருத்தமளிக்கிறது.
ஆனால் இந்தச் செய்தியை நாம் சரியாகப் வழங்க வேண்டும். இந்த தொழிற்சங்க தலைவர்கள் சரியான செய்தியை தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளாக இருக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.
(Visited 10 times, 1 visits today)