இலங்கை செய்தி

சினிமா பாணியில் வியாபாரியிடம் பணத்தை கொள்ளையிட்ட சாரதி

அதுருகிரி பகுதியைச் சேர்ந்த கோழி வியாபாரி ஒருவரிடம் மிளகாய்ப் பொடியை தூவி பணத்தை கொள்ளையடித்த பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு  சந்தேக நபர்களையும் ஆத்துருகிரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வர்த்தகரின் லொறியின் சாரதி என்பதும், கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபரின் மனைவியும் அடங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லொறியில் பயணித்த போது உடல் தேவையை பூர்த்தி செய்வதாக கூறி லொறியை நிறுத்திவிட்டு மிளகாய் பொடியை வீசி பணத்தை கொள்ளையடித்து சென்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையின் போது சந்தேகநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 186,500 ரூபாவை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!