ஆசியா

கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நியூசிலாந்து விமானி; மீட்க சென்ற 13 ராணுவ வீரர்கள் படுகொலை

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிளர்ச்சி படை கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால், கடந்த 2 மாதங்களாக இதுபற்றி எழுதி வந்த கடிதங்களும் புறக்கணிக்கப்பட்டன. இதன்பின், நியூசிலாந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சி படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானி பிலிப் மெர்தன்ஸ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுசி ஏர் வர்த்தக விமானத்தில் டுகா பகுதியில் அமைந்த பாரோ விமான நிலையத்தில் சென்று இறங்கி உள்ளார்.அவரை கிளர்ச்சியாளர்கள் படை பணய கைதியாக பிடித்து சென்றது.

Indonesian

 

அவரை மீட்க இந்தோனேசியா ராணுவம் முயற்சித்து வருகிறது. இதில், விமானி பிலிப் அடைத்து வைக்கப்பட்டு இருக்க கூடும் என நம்பப்படும் பகுதியை ராணுவ வீரர்கள் வளைத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களை கிளர்ச்சியாளர்கள் படை துப்பாக்கிகளால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் வீரர் ஒருவரின் உடலை ராணுவத்தினர் மீட்டு உள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் படை, டுகா பகுதிக்கு உட்பட்ட யால் மற்றும் முகி ஆகிய 2 மாவட்டங்களில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. அவர்களிடம் மீதம் 12 வீரர்களின் உடல்கள் உள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content