செய்தி தமிழ்நாடு

கட்டப்பஞ்சாயத்தில் கத்தி குத்து வி.சி.க பிரமுகர் படுகொலை

சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மண்டக்குட்டி ரமேஷ் ஆவார். ரமேசுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார்.
இவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி ஆல்கடத்தல் அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் சென்னை காவல்துறையில் ஏ கேட்டகிரி ரவுடி ஆவார். இந்த நிலையில் இன்று காலை கேகே நகர், பாரதிதாசன் காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் இவரை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரியல் எஸ்டேட் தொடர்பன கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இதனால் பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளாதக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமேஷ் கொலை செய்யபப்ட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!