இலங்கை செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணின் பரிதாப நிலை

ஹிக்கடுவ தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓய ஆற்றிலிருந்து நேற்று முன்தினத் பிற்பகல் ரஷ்ய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிஸனோவஸ்கியா செனியா என்ற 35 வயதுடைய பெண், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஹிக்கடுவை கல்வல வீதியிலுள்ள ரிவர் குடிசையில் தங்கியுள்ளார்.

சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய பெண்ணான இவர் இலங்கை வந்துள்ளார்.

ஆற்றில் அவரது சடலம் மிதப்பதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

காலி பதில் நீதவான் லலித் பத்திரனவின் உத்தரவின் பிரகாரம் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் முலெதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!