செய்தி வட அமெரிக்கா

எலிகள் மூலம் மீண்டும் கொரானா பரவும் அபாயம்; ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் மூன்று விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கழிவுநீர் பாதையிலுள்ள எலிகளுக்கு இந்த வகை கொரானா வைரஸ் வர வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது. உயிரியலாளர்கள் 79 எலிகளில் 13க்கு நேர்மறை சோதனை செய்ததைக் கண்டறிந்துள்ளனர்.

The

எங்கள் கண்டுபிடிப்புகள் எலி மக்கள் தொகையில் SARS-CoV-2 ஐ மேலும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகின்றன, வைரஸ் விலங்குகளில் புழக்கத்தில் உள்ளதா மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனையாக உருவாகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம் என மருத்துவர் வான் கூறியுள்ளார்.ஒட்டுமொத்தமாக, இந்த இடத்தில் எங்கள் ஆராய்ச்சி மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்களில் விலங்குகள் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, எனவே மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே இதன் மூலம் பொதுமக்களுக்கு எலிகள் மூலம் கொரானா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி