ஆசியா

உலக நாடுகளுக்கு தொடர் அதிர்ச்சி கொடுக்கும் வடகொரியா

வட கொரியா இன்று இரண்டு குறுந்தொலைவு புவியீர்ப்பு ஏவுகணைகளைச் சோதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை வாரங்களில் வட கொரியா தொடர்ந்து ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது.

பியோங்யாங்கின் புதிய ஏவுகணைச் சோதனைக்கு, சோல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் அண்மைச் சோதனை ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை மீறிய தூண்டுதல் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானும் வட கொரியாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கே உள்ள ஹூவாங் ஹே (Hwang-hae) வட்டாரத்திலிருந்து வட கொரியா பாய்ச்சிய ஏவுகணைகள் சுமார் 370 கிலோமீட்டர் பறந்து ஜப்பானியக் கடலில் விழுந்ததாக சோல் கூறியது.

சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு வெளியே இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

கடலடி அணுவாயுத ஆளில்லா வானூர்தியையும் கப்பல் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்ததாக வட கொரியா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் அண்மையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அது போருக்கான ஒத்திகை என்று கருதுகிறது வட கொரியா. அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளைப் பியோங்யாங் அதிகரித்துள்ளது.

 

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!