இலங்கை செய்தி

இலங்கையர் அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம்!

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதன் மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெறுவதே எமது இலக்காகும்.

இந்த நோக்கத்திற்காக அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர், இது ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் பொறுப்பு என்றும் கூறினார்.

அதோடு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் நலனுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை உள்ளடக்கும் வகையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மீறும் நபர்களை நீக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார இதன்போது மேலும் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை