இந்தியா செய்தி

இந்திய தலைநகரம் முடங்கும் வகையில் நடைபெற்ற உழைக்கும் மக்கள் பேரணி.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. க அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடுவதாக அறிவித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் – விவசாயிகள் இணைந்து நடத்தும் பேரணி இன்று நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் இடம்பெற்றது.

பல்வேறு மதம், சாதி, மொழி, இனம் என பிரிந்த போதிலும் உழைக்கும் மக்களாய் கரம் கோர்த்து நடைபெற்ற  இப்பேரணியில் பணவீக்கம், வேலையின்மை, ஊதிய உயர்வு, தொழிலாளர் விரோத சட்ட ரத்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கவேண்டும் என போராட்ட முழக்கங்கள் எழுப்பினர்.

புதுடெல்லியின் அதிர்வலை நாடு முழுவதும் கடத்த வேண்டும், உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் பேரணியின் நியாயம் உணர வேண்டும், மக்கள் பிற்போக்கு அடையாளங்களை கடந்து வர்க்கமாக அணிதிரளவேண்டும், முதலாளித்துவ – பாசிச சக்திகளை வேரறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி