ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 47 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

47 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம், பராமரிப்பாளர் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு 02 வாரங்களுக்கு 37.50 டொலர்கள் ஒரு தனி நபருக்கும், ஒரு ஜோடிக்கு 02 வாரங்களுக்கு 56.40 டொலர்களுக்கும் அதிகரிக்கும்.

எனவே, ஒரு ஓய்வூதியதாரருக்கான அதிகபட்ச ஓய்வூதியம் 02 வாரங்கள் தொடர்பாக 1064 டொலர்களாக அதிகரிக்கும்.

02 வாரங்களுக்கு ஒரு ஜோடிக்கு அதிகபட்ச ஓய்வூதியம் 1604 டொலராக அதிகரிக்கும்.

22 வயதுக்கு மேற்பட்ட வேலை தேடுபவர் கொடுப்பனவு பெறுபவர்கள் இன்று முதல் 02 வாரங்களுக்கு  24.70 டொலர் கூடுதலாகப் பெறுவார்கள். அதன்படி, 701.90 டொலராக உயரும்.

குழந்தைகளைப் பெற்றிருக்கும் ஆனால் பங்குதாரர் இல்லாத நபருக்கு, 02 வாரங்களுக்கு ஒற்றைப் பெற்றோர் கூடுதல் கொடுப்பனவு 33.90 டொலராகும். அதன்படி, 967.90 டொலராக உயரும்.

இது தவிர மேலும் பல சலுகைகளும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்துடன், இந்த கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!