ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் பணவீக்கம் அதிகரிப்பு : உயரும் வட்டி வீதம்!

அவுஸ்ரேலிய மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு மற்றொரு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று முதல் வட்டி விகிதம் 3.6 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது கடந்த 11 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட மிக உயரிய வட்டி விகிதம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிலிப் லோவ் மேலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய வளர்ச்சி மற்றும் மென்மையான தேவை ஆகிய இரு காரணிகளும் வரும் நாட்களில் பணவீக்கம் மிதமான நிலையில் இருப்பதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் பணவீக்க பிரச்சினை உலகளாவியது என்றும், அரை மில்லியன் டாலர் அடகு வைத்திருக்கும் ஒருவர் சமீபத்திய கடன் உயர்வுகளுக்கு பிறகு 1000 அவுஸ்ரேலிய டொலர்களை கூடுதலாக செலுத்துவார் எனத் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

hqxd1

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித