ஐரோப்பா செய்தி

வேல்ஸில் காணாமல்போன ஐவரில் மூவர் சடலங்களாக மீட்பு!

வேல்ஸில் காணாமல் போன ஐவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோஃபி ருசன், ஈவ் ஸ்மித், டார்ஸி ரோஸ், உள்ளிட்ட ஐவர் சனிக்கிழமை அதிகாலை கார்டிஃபின் லானேடெயர்ன் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் காணாமல்போனதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார் இன்றைய தினம் மூவரின் சடலங்களை மீட்டதாக கண்டுப்பிடித்துள்ளனர். அதேநேரம், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி