ஐரோப்பா செய்தி

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் – கடும் நெருக்கடியில் மக்கள்

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை அகற்றக்கோரி பொலிஸ் தலைமை அதிகாரி, நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் கேரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆன் இதால்கோ, நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காக்கிறார்.

இதனால் தற்போது நிலமையை பாரிஸ் பொலிஸ் தலைமையகம் கையில் எடுத்துள்ளது.

உடனடியாக கழிவுகளை அகற்றும் நோக்கில், தனியார் கழிவு அகற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளனர்.

தனியார் ஊழியர்களை வைத்து பாரிஸில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

கடந்த 10 நாட்களாக துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து, நிலமை மிகவும் மோசமடைந்துள்ளது.

இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி