ஆசியா

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர் – மனைவி எடுத்த விபரீத முடிவு – பிள்ளைகளின் பரிதாப நிலை

சிங்கப்பூரில் கணவர் வேலைபார்த்து வரும் நிலையில், மனைவி சொந்த ஊரில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மீனவரான பழனி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் செய்துக் கொண்டுள்ள நிலையில் 32 வயதான ரஞ்சிதா என்ற மனைவி சொந்த ஊரில் வசித்து வருகின்றார்.

சிங்கப்பூரில் இருந்து மனைவி ரஞ்சிதாவிற்கு கடந்த மார்ச் 4ம் தேதி போன் செய்து பழனி பேசியுள்ளார். அப்போது குழந்தைகள் காதணி விழா புகைப்படம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதன் காரணமாக விரக்தி அடைந்த ரஞ்சிதா துாக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்க மக்கள் அரச மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனளிக்காமல் கடந்த 5 நாள் முன்னர் ரஞ்சிதா இறந்தார்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!