ஆசியா

ஏமன் கடற்கரையில் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்

ஏமன் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல் ஒன்று எந்த நேரத்திலும் மூழ்கும் நிலையில் உள்ளதாகவும், இது சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு எப்.எஸ.ஓ சேஃபர என்ற கப்பல் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்களுடன் கைவிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எந்தநேரத்திலும், வெடிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு மட்டுமன்றி மனிதாபிமான பேரழிவும் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் டேவிட் கிரெஸ்லி, செங்கட் கருங்கடலாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

இது ஒரு பழங்கால கப்பல் எனவும், அந்த காலத்தைச் சேர்ந்த 1976 இன் சூப்பர் டேங்கர், எனவே பழமையான கப்பல் என்பதோடு கைவிடப்பட்டதால், எந்த நேரத்திலும் மூழ்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content