ஆசியா

ஈரான், சவுதி அரேபியா உயர்மட்ட பயணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரானும் சவுதி அரேபியாவும் இருதரப்பு உறவுகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு இணங்கவும் உயர்மட்டங்கள் உட்பட பரஸ்பர பயணங்களை பரிமாறிக்கொள்ளும் என்று   ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சவூதி அரேபியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம்  தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாசர் கனானி வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சௌத்திடம் இருந்து ரைசியின் வருகைக்கான அழைப்பிதழ் வந்துள்ளதாக கனானி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஈரானிய ஜனாதிபதி சவுதி மன்னரை தெஹ்ரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஒருவரையொருவர் வருகைக்கு அழைத்துள்ளனர் என்றும் கனானி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தகைய பரிமாற்ற விஜயங்கள் தேவையான திட்டமிடல் மற்றும் தேவையான நிறைவேற்று நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்படும் என்று பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!