இலங்கை

இந்திய முட்டைகளால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இணைய செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்இ இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியதாலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சில ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் காலாவதியாகும் திகதி அழிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் பறவைக்காய்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content