ஆப்பிரிக்கா

நாளொன்றுக்கு 10 மணித்தியாளங்கள் மின் வெட்டை அமுல்படுத்தும் தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா மோசமான மின் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் மின்சாரம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிகளை சரிசெய்வதற்காக அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவர அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்சாரத்துறைக்கு புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும், புதிய அமைச்சர் மின்வெட்டுக்களை கையாள்வதில் மட்டுமே கவனம் செலுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் அரசுக்குச் சொந்தமான மின்சாரப் பயன்பாட்டு நிறுவனமான எஸ்காம் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மின்வெட்டுகளை அமல்படுத்தியுள்ளது.

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!