இலங்கை

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு அறிமுகமாகும் நடைமுறை

இலங்கையில் இருந்து தொழிலுக்காக வௌிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வௌியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.

அத்துடன், தொழிலுக்காக வௌிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான திருமணமாகாத பிள்ளைகளை உடைய தாய்மார், தமது பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாற்று வேலைத்திட்டமொன்றை, தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் முன்வைக்க வேண்டும்.

வௌிநாட்டில் தொழில்புரிந்த நிலையில், உள்நுழைவு விசாவுடன் நாட்டிற்கு வரும் போது, 6 மாதத்திற்குள் மீண்டும் வௌிநாடு செல்வதானால், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை முன்வைக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்