ஐரோப்பா செய்தி

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு!

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு!

ரஷ்யா – உக்ரைன் போரில் கடந்த இரண்டு நாட்களாக ரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலின்போது ரஷ்யா உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து 80 நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் தற்காலிகமாக சக்தியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். அதேபோல் புதுபிக்கப்பட்ட தகவல்களின் படி வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி