இலங்கை

ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் பணிகள் நிறைவு – இன்று நாடு திரும்புகின்றனர்

ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழு, தங்கள் பணியை நிறைவு செய்து இன்று நாட்டிற்கு திரும்புகின்றனர்.

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 31 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு டிசம்பர் 03 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர்.

சிலாபம் பொலிஸ் மைதானத்தில் அவர்களால் நிறுவப்பட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ சேவையை அவர்கள் வழங்கினர்.

மேலும் அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இன்று காலை சுகாதாரச் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கைவை சந்தித்தனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!