ஐரோப்பா செய்தி

சாரா சுல்தானாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை? ; சுவிஸ் தகவல் ஆணையம் அதிரடி பரிந்துரை

பிரித்தானியாவின் புதிய இடதுசாரி கட்சியான ‘யுவர் பார்ட்டி’ (Your Party) தலைவர்களுக்கு இடையிலான மோதல், தற்போது பொலிஸ் விசாரணை வரை செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

கட்சியின் இணைத் தலைவரான சாரா சுல்தானா (Zarah Sultana), அனுமதியின்றி உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தை ஆரம்பித்து நிதி திரட்டியதாகக் கூறி, தகவல் ஆணையத்திடம் (ICO) புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தகவல் ஆணையம், இதில் ‘பாரிய குற்றவியல் நடவடிக்கைகள்’ (Serious Criminal Activity) இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து பொலிஸார் மற்றும் மோசடி தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்துவதே சிறந்தது எனப் பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், இந்த வழக்கை தகவல் ஆணையம் கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள சாரா சுல்தானா, இதனை ஒரு வெற்றியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) தரப்பு சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதால், கட்சியின் எதிர்காலம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!