ஏழாவது முறையாக உகாண்டாவின் ஜனாதிபதியான யோவேரி முசேவேனி
உகாண்டாவின்(Uganda) தற்போதய ஜனாதிபதி யோவேரி முசேவேனி(Yoweri Museveni) ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
81 வயதான முசேவேனி 71.65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அவர் தனது முக்கிய போட்டியாளரான 43 வயதான போபி வைனை(Bobi Wine) தோற்கடித்தார், அவர் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
1986ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கும் யோவேரி முசேவேனி இணைய முடக்கம், ராணுவ ஆதிக்கம் போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது 40 ஆண்டு கால ஆட்சி போபி வைனால் முடிவிற்கு கொண்டு வரப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யோவேரி முசேவேனியின் வெற்றி வந்துள்ளது.





