இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – தீவிர விசாரணையில் பொலிஸார்

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்குனகொலபெலஸ்ஸ-அபேசேகரகம வீதியில் கீரியகொடெல்ல சந்தியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சந்தீப லக்ஷான் என்ற 23 வயதுடைய இளைஞன் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)