இலங்கை

இலங்கையில் நிர்வாண ஒளிப்படங்களுடன் சிக்கிய இளம் பிக்கு!

இலங்கையில் சிறுவர், சிறுமியரின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் குறித்த படங்களை விற்பனை செய்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (19.09) அப்பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்த விகாரையை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த விகாரையில் இருந்த 19 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணக் காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்ததுடன், அதில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பதும்  தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்கள் மூலம் பிறரால் வெளியிடப்படும் நிர்வாண காட்சிகளை தான் சேகரித்து அதை விநியோகம் செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் தான் காணொளி காட்சிகளை விற்று சம்பாதிக்கும் பணத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதோடு, சிறு வியாபாரமாக கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தை வரவு வைப்பதாக வங்கிக் கணக்கின் உரிமையாளரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content