யாழ்ப்பாணம்: சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு விளக்கமறியல்.
யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 08 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் குறித்த சிறுமிக்கு மாமன் முறையிலான உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




