இலங்கை செய்தி

யாழ்ப்பாணம்: சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு விளக்கமறியல்.

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 08 ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர் குறித்த சிறுமிக்கு மாமன் முறையிலான உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!