இலங்கை

இலங்கை: கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்: தவறான பெயர்! மொஹமட் அசாம் ஷெரிப்தீன் சீராய்வு மனு தாக்கல்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாகக் குறிப்பிட்டு அவரது குடும்பத்திற்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரரால் பெப்ரவரி 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொலைக்குற்றம் தொடர்பாக அதே நபர் அல்ல என வாதிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொலிசார் வேறு ஒரு நபரை தடுத்து வைத்துள்ளதாகவும் மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இரு வேறு நபர்கள் எனவும் சட்டத்தரணி நுவான் ஜயவர்தன சார்பில் சட்டத்தரணி தசுன் பெரேரா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த தவறான அடையாளத்தால் ஷெரிப்தீனின் குடும்பத்திற்கு சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் சட்டத்தரணி மேலும் கோரியுள்ளார்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேகநபர் இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாததால், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரது கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்