இலங்கை செய்தி

கொழும்பிற்கு பிழையான தகவல் செல்கிறது – வைத்தியர் அர்ச்சுனா கவலை

கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை.

நான் இது தொடர்பாக அவர்களுடன் தொலைபேசி உரையாடலில் பேச விரும்பாமையினால் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கடிதங்கள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!