இலங்கை

மோசமான தோல்விகள் – இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணி – காத்திருக்கும் நெருக்கடி

மோசமான தோல்விகளை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-174 இன்று காலை 05.05 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கூடியது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை தழுவியது.

9 போட்டிகளில் 7ல் இலங்கை அணி தோல்வியடைந்தது. நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் நியூசிலாந்திடம் 5 விக்கெட்டுக்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்குச் சென்றது.

இதன்படி எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தகுதி பெறுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!