அறிந்திருக்க வேண்டியவை

மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கிய ஜப்பான்

மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

LignoSat என்கிற அந்த  செயற்கைக்கோளை மெக்னோலியா (magnolia) வகை மரத்தால் செய்யப்பட்டது.

அது எளிதில் தெறிக்காத மர வகை பயன்படுத்தப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அது அமெரிக்க விண்வெளியில் பாய்ச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலோகத்தால் செய்யப்படும் செயற்கைக்கோளால் விண்வெளியில் குப்பைகள் அதிகரித்துவிட்டன.

அதனால் மரம் போன்ற எளிதில் மக்கக்கூடிய பொருள்களால் செயற்கைக்கோளை செய்ய முயற்சி செய்வதாக ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் கூறினார்.

சரியான மர வகையைத் தேர்ந்தெடுக்கப் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டதாக The Guardian குறிப்பிட்டது. மெக்னோலியா வகை மரமே ஆக வலுவானதாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அதைக் கொண்டு செய்யப்பட்ட செயற்கைக்கோள், ஒரு காப்பிக் குவளையின் அளவு தானாகும்.

அது சுமார் 6 மாதங்களுக்கு விண்வெளியில் செயல்படும் என்று நம்பப்படுகிறது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.