செய்தி

இலங்கையில் பாத்திரம் கழுவச் சென்று முதலைக்கு பலியான பெண்

களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளதார்.

இச்சம்பவத்தில் களுத்துறை, தொடங்கொட, கொஹொலான வடக்கு பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய மல்லிகா நிலந்தி மங்கலிகா என்ற திருமணமான பெண்ணே முதலை பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் நேற்று கொஹொலன பிரதேசத்தில் தனது வீட்டின் எல்லையில் உள்ள களு கங்கையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது, ​​அப்பெண் கூக்குரலிட்டதையடுத்து அவரது கணவர் உள்ளிட்ட பலர் உடனடியாக ஆற்றிற்குள் விரைந்து சென்ற போதிலும், முதலை நீருக்கு அடியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் களுத்துறை கடற்படை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் இணைந்து பொலிஸார், பிரதேசவாசிகள் படகொன்றில் தேடுதல் மேற்கொண்ட போது, குறித்த பெண்ணை முதலை வாயில் இருந்து விடுவித்துள்ளது.

ஆயினும் குறித்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!