வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து பெண் மர்ம மரணம்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் பெண் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





