Site icon Tamil News

விவாகரத்து காரணமாக திருமண புகைப்படக் கலைஞரிடம் பணத்தை மீளக் கேட்ட பெண்

தென்னாப்பிரிக்க இளம் பெண், திருமண புகைப்படக்கார் ஒருவரை வழக்கத்திற்கு மாறாக கோரிக்கையுடன் அணுகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும், திருமண புகைப்படத்திற்காக செலுத்திய பணத்தை திருப்பி தர வேண்டும் என கோரி அந்த பெண் புகைப்படக்காரரிடம் கோரியுள்ளார்.

இது குறித்து புகைப்படக் கலைஞருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“உனக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 2019 இல் டர்பனில் எனது திருமணத்தை புகைப்படம் எடுத்தீர்கள்.

திருமண தருணங்களை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது என் உறவு முறிந்துவிட்டது.

எனக்கு திருமண படங்கள் இனி தேவையில்லை, அவை வீணாகின்றன. எனவே நான் செலுத்திய தொகையை என்னிடம் திருப்பித் தர வேண்டும்.

லான்ஸ் ரோமியோ என்ற புகைப்படக்காரர் வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலில் புகைப்படக்காரர் அதை நகைச்சுவையாக நினைத்தார். ஆனால் அதன் தீவிர் தன்மையை பின்னர் உணர்ந்தார்.

விவாகரத்து செய்துவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற தனக்கு உரிமை இருப்பதாக அந்தப் பெண் கூறுகிறார். ஆனால் புகைப்படக்காரர் வழக்கத்திற்கு மாறான கோரிக்கையை மறுத்துவிட்டார்.

ஆனால் அந்த இளம்பெண் விடவில்லை. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு நேரில் சந்திக்குமாறு அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார், ஆனால் அதையும் புகைப்படக்காரர் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், அந்த பெண்ணின் முன்னாள் கணவர் புகைப்பட கலைஞரை தொடர்பு கொண்டு அந்த பெண்ணின் சார்பாக மன்னிப்பு கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது மொத்தக் கட்டணத்தில் 70 சதவீதத்தையாவது திரும்பப் பெற வேண்டும் என்று அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version