இலங்கை செய்தி

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது

களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த பெண் சந்தேகநபர், களுத்துறை சிறைச்சாலையில் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாகவும், அங்கு அவரது கணவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தனது கணவருக்கு உணவு வழங்கும் போர்வையில் கொண்டு வந்த கோழிப் பொதியின் எலும்புகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தம்பதியினரின் 06 வயது மகளுடன் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 20 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!