இலங்கை

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கி கடன் பெற்ற பெண் கைது : இலங்கையில் சம்பவம்!

பாணந்துறை   வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை திருடி அவருடைய தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி, ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளரின் பணப்பை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போது, ​​2,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் காணாமல்போயுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்,  பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து  நீங்கள் வாங்கிய கடன் தொகையின் தவணை சரியாக செலுத்தப்படவில்லை என்றும், அதனை செலுத்துமாறும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த தாதி இந்த விடயத்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன்பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!