“கோ ஹோம் ஹரிணி” என கோஷம் எழுப்பிவிட்டு வெத்து வேட்டாக வீடு திரும்பிய விமல்!
கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாகிரகப் போராட்டத்தை விமல் வீரவன்ச Wimal Weerawansa முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், அது தொடர்பில் அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்படுகின்றது.
தமது போராட்டம் வெற்றியளித்துவிட்டது என விமல் வீரவன்ச அறிவிப்பு விடுத்தாலும், இது விடயத்தில் வெற்றியென கேள்வி எழுப்படுகின்றது.
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என்பதே விமல் வீரவன்சவின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன.
இவை நடக்கும்வரை தனது போராட்டம் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார். ஆனால், நேற்று முன்தினம் ஆரம்பித்த போராட்டத்தை விமல்வீரன்ச நேற்று நிறைவுக்கு கொண்டுவந்தார்.
தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்த நிலையிலேயே விமல் இவ்வாறு போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
ஆனால் கல்வி மறுசீரமைப்பு முழுமையாக கைவிடப்படவில்லை. தரம் ஒன்றிக்குரிய மறுசீரமைப்பு இடம்பெறும். தரம் 6 இற்குரிய மறுசீரமைப்பு மட்டுமே தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு பதவியில் எவ்வித மாற்றமும் நடக்கவில்லை. பிரதமர் ஹரிணி வசமே கல்வி அமைச்சு தொடர்ந்து இருக்கின்றது.
எனவே, விமல் கூறியதுபோல கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படவில்லை, பிரதமர் கல்வி அமைச்சு பதவியை துறக்கவும் இல்லை.
இந்நிலையில், கோ ஹோம் ஹரிணி என்பதே சத்தியாக்கிரகப் போராட்டக் களத்தில் உங்கள் கோஷமாக இருந்தது. ஆனால் பிரதமர் பதவி விலகவில்லையே………கடைசியில் விமல்தானே வீட்டுக்கு சென்றுள்ளார் ”என விமல் வீரவன்சவிடம் இன்று வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எனது பிரதான இலக்கு. அது நடந்துவிட்டது. அதன்மூலம் கல்வி அமைச்சரின் சிறது துண்டிக்கப்பட்டுவிட்டது.
பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்ந்து செயல்படுவது எமக்கு பிரச்சினை இல்லை.” – என்றார்.





