இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?
“மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்றது.
இதன்போது மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா, மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“போர் சூழ்நிலை எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை தற்போது கணிக்க முடியாது. உக்கிர நிலை ஏற்பட்டால்கூட நெருக்கடி நிலையை முகாமை செய்வதற்குரிய வழிமுறைகளையே அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.





