விளையாட்டு

மீண்டெழுமா இலங்கை அணி? 2ஆவது T-20 போட்டி நாளை!

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான 2ஆவது T-20 போட்டி நாளை (01) நடைபெறவுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் Pallekele International Stadium இலங்கை நேரப்படி போட்டி 7 PM மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் ODI தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் T-20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திலாந்து அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதனால் டக்வொர்த் லூயிஸ் Duckworth-Lewis முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!