இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்க புடின் இந்தியா வருவாரா? ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட தகவல்

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வரமாட்டார் என ரஷ்ய அதிபர் மாளிகை கிரிம்ளின் தெரிவித்துள்ளது.

அத்துடன் உச்சிமாநாட்டில் புடின் காணொலி வாயிலாக அல்லது பிற வழிகளில் பங்கேற்பது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக மாநாட்டில் புடின் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் மாநாட்டை போன்றே ஜி20 மாநாட்டிலும் புடின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி20 நாடுகளின் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர், சென்னை என பல்வேறு நகரங்களில் ஜி20 நாடுகளின் மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான உச்சிமாநாடு வரும் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே